புருஷன் போலீசில் சிக்கிட்டா நாம ஜாலியா இருக்கலாம்.. பெண் போட்ட மாஸ்டர் பிளான்.. சிக்கியது எப்படி?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Pandidurai T | Feb 27, 2022 10:01 PM

கேரளா மாநிலம் இடுக்கி பகுதியில் வசித்து வருபவர் சவுமியா சுனில்(34). இவர் என்பவர் வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். பிரபல கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த வினோத் என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. வினோத் என்ற நபர் தற்போது சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார்.

wife who planned to trap her husband with the police in Kerala

இந்நிலையில், திருமணத்தை மீறிய உறவின் காரணமாக, சவுமியா தனது கணவரை பிரிந்து செல்லவும், அவர் மீது அபாண்ட குற்றச்சாட்டை சுமத்தவும் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி தன்னுடயை கணவர் சுனிலின் பைக்கில் போதை பொருள் செடி ஒன்றை இவர் வைத்தாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மர்ம நபர் ஒருவர், சுனிலின் வாகனத்தில் கஞ்சா இருப்பதாக, காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுனிலுடைய வாகனத்தை சோதனை செய்த போது அதில் போதை பொருள் செடி இருந்தது.

பின்னர், போலீசார் சுனிலிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவருக்கும் அந்த கஞ்சா செடிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்பு, காவல்துறைக்கு தகவல் அளித்த நபர் தொடர்பாக விசாரிக்கப்பட்டது. அந்த நபரின் தொலைபேசியை கைப்பற்றிய போலீசார் அதன சோதனையிட்டதில்,  சுனில் மனைவிக்கு போன் செய்து பேசியது தெரிய வந்தது. அதன்படி, காவல்துறையினர் சவுமியாவிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் தனது திட்டத்தை  காவல்துறையினரிடம் கூறினார்.

wife who planned to trap her husband with the police in Kerala

அதாவது அவருக்கும் வினோத் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதற்கு இடையூறாக இருந்த கணவரை இந்தத் திட்டம் மூலம் காவல்துறையில் சிக்க வைத்துவிட்டு வினோத்துடன் வாழ இவர் முடிவு எடுத்ததாகவும் கூறியுள்ளார்.  பின்னர், காவல்துறையினர் சவுமியாவை கைது செய்தனர். மேலும் அவருக்கு போதை பொருள் செடியை விற்றவர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த நபர் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவு காரணமாக உள்ளாட்சி கவுன்சிலர் ஒருவர் இப்படி செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KERALA #WIFE #POLICE #HUSBAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Wife who planned to trap her husband with the police in Kerala | India News.