'காதல் மன்னனாக மாறிய கணவன்!'.. கூட்டமாக சென்று குமுறு கஞ்சி காய்ச்சிய மனைவி!.. 'புகார் அளித்த 4 பெண்கள்'.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 03, 2020 01:49 PM

தெலுங்கானாவில் மனைவியை துன்புறுத்தி பிறந்த வீட்டுக்கு அனுப்பிய கணவன் மேலும் 3 பெண்களை ஏமாற்றியது தெரிய வந்ததும் மனைவியும் அவரது உறவினர்களும் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

wife found husband lives another 3 women and assaulted him

கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த சம்பத் என்பவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் அவர் தன் மனைவியை அடித்து பிறந்த வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அதன் பின்னர் தான் வேலை பார்க்கும் ஷாப்பிங் மாலில் தன்னுடன் பணிபுரிந்த இன்னொரு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டு வாடகை வீட்டில் யாருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற மனைவி, தன் குடும்பத்தினருடன் சேர்ந்து சம்பத்தை அடித்துத் துவைத்து, கயிற்றில் கட்டி இழுத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். அப்போதுதான் காவல்துறையினர் சம்பத்தை விசாரித்தபோது மேலும் 3 பெண்களை அவர் இதேபோல் ஏமாற்றியது தெரிய வந்தது.

இதனையடுத்து மனைவி உள்ளிட்ட நால்வரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் சம்பத்தை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Wife found husband lives another 3 women and assaulted him | India News.