Veetla Vishesham Others Page USA

"ஏழேழு ஜென்மத்துக்கும் நீதான் என்னோட மனைவி".. சத்தியம் செய்த மாப்பிள்ளை.. நம்பி சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jun 15, 2022 04:44 PM

உத்திர பிரதேச மாநிலத்தில் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக மாப்பிளை மீது இளம்பெண் ஒருவர் புகாரளித்திருக்கிறார். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

UP man thrashes his third wife after she objects his previous marriage

Also Read | பசியுடன் சுற்றித்திரிந்த குரங்கு.. போலீஸ் அதிகாரி காட்டிய பாசம்.. நெகிழ வைக்கும் வீடியோ..!

திருமணம்

உத்திர பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ளது நிலோஹா கிராமம். இந்த கிராமத்தில் வசித்துவரும் தனது கணவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் இளம்பெண் ஒருவர். மேலும், கணவரின் உறவினர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் அந்தப் பெண் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரிக்கையில், தனக்கும் நிலோஹா கிராமத்தை சேர்ந்தவருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றதாகவும், தனக்கு இதற்கு முன்னர் திருமணமாகவில்லை என திருமணத்திற்கு முன்னர் அவர் கூறியதாலேயே தான் அவரை மணமுடிக்க சம்மதித்ததாகவும் தெரிவித்திருக்கிறார் இந்த இளம்பெண்.

அதிர்ச்சி

எதிர்கால வாழ்க்கை குறித்து தன்னிடம் நிறைய ஆசைகளை கூறிய அவரை தான் முழுமையாக நம்பி திருமணம் செய்துகொண்டதாக குறிப்பிட்ட அந்தப்பெண், திருமணமான பிறகுதான் தனக்கு உண்மை தெரியவந்ததாகவும் கூறியுள்ளார். திருமணம் முடிந்து மணமகனின் வீட்டிற்கு சென்று வசிக்க துவங்கிய சில நாட்களிலேயே அந்த மாப்பிள்ளைக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடைபெற்றிருப்பது குறித்து இளம்பெண்ணுக்கு தெரியவந்திருக்கிறது.

UP man thrashes his third wife after she objects his previous marriage

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் தனது கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது அவர் தன்னை தாக்கியதாகவும், அவருடைய பெற்றோர் தகாத வார்த்தைகளால் தன்னை வசைபாடியதால் ஒருகட்டத்தில் தனியாக வசிக்க துவங்கிவிட்டதாக காவல்துறையினரிடம் கண்ணீருடன் கூறியுள்ளார் இளம்பெண்.

வழக்கு

தனியாக வசித்துவந்த போதிலும் தனது கணவர் வீட்டார் தொடர்ந்து தன்னை தாக்கிவருவதாக மாவானா காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார் பாதிக்கப்பட்ட இளம்பெண். இந்நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திர பிரதேசத்தில் ஏற்கனவே இரண்டு முறை திருமணமானதை மறைத்து மூன்றாம் திருமணம் செய்துகொண்ட ஆண் மீது அவருடைய மூன்றாவது மனைவி புகாரளித்திருப்பது அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "மாட்டுக்கு வைத்தியம் பார்க்கனும்னு கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிவச்சிட்டாங்க சார்".. போலீசில் கதறிய கால்நடை டாக்டர்..!

Tags : #UTTAR PRADESH #UP MAN #WIFE #PREVIOUS MARRIAGES #மனைவி #மாப்பிள்ளை #திருமணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. UP man thrashes his third wife after she objects his previous marriage | India News.