"ரியா போதை பொருட்களை வாங்கியுள்ளார்... ஆனால்"... நடிகை டாப்ஸி போட்ட புதிர்!.. சுஷாந்த் மரண வழக்கில் புதிய திருப்பம்?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Sep 09, 2020 04:14 PM

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் போதைப்பொருள் வாங்கியது, வைத்திருந்தது மற்றும் விநியோகித்தது ஆகிய குற்றங்களுக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவால் நடிகை ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

sushanth case taapsee says rhea was procuring drugs but not consuming

முன்னதாக, ரியாவுக்கு ஆதரவாக பேசியிருந்த டாப்ஸி, முன்னணியில் இருக்கும் ஒருவருடன் இருந்தால் பணம் சுரண்டுபவராகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை என தெரிவித்ததுடன், நெட்டிசன்கள் விமர்சனத்திற்கு பதிலடியும் கொடுத்திருந்தார். இந்நிலையில், "ரியா போதைப்பொருட்களை வாங்கியுள்ளார். ஆனால், அதை உட்கொள்ளவில்லை" என நடிகை டாப்ஸி ட்வீட் செய்துள்ளார்.

தற்போது, "ரியா போதைப்பொருட்களை உட்கொள்ளவில்லை. சுஷாந்திற்காக வாங்கியுள்ளார் என்பது மட்டுமே உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, சுஷாந்த் உயிரோடு இருந்திருந்தால், அவரும் கைது செய்யப்பட்டிருப்பார். ஆனால், இப்போது சுஷாந்தை போதைப்பொருள் எடுக்க ரியா வற்புறுத்தி இருக்கலாம் அல்லது கஞ்சா வாங்கித்தரச்சொல்லி சுஷாந்த் ரியாவை கட்டாயப்படுத்தி இருக்கலாம்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sushanth case taapsee says rhea was procuring drugs but not consuming | India News.