மனைவியின் ஆசையை நிறைவேற்ற ரூ.7 கோடி செலவில் கோவில் கட்டிய கணவன்.. ராஜஸ்தானில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Mar 03, 2023 12:34 PM

ராஜஸ்தான் மாநிலத்தில் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற 7 கோடி ரூபாய் செலவழித்து கோவில் ஒன்றை கட்டியுள்ளார் கணவர். இந்நிலையில், இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

Rajasthan Businessman who Built Temple to fulfill his wife wish

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | "ஆன்லைனில் பணம் அனுப்புறேன்".. ஸ்மார்ட் டிவியை திருடிச்சென்ற ஸ்மார்ட் இளைஞர்...!

சந்தோஷி மாதா

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கேதர்பாஷி லெங்கா. இவர் சொந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மனைவி பைஜந்தி லெங்கா. இருவரும் ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள். இவர்களுள் பைஜந்தி சிறுவயது முதலே சந்தோஷி மாதாவை மிகுந்த அக்கறையோடு வழிபட்டு வந்திருக்கிறார்.

பொதுவாக வட இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சந்தோஷி மாதா வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர். வருடத்தில் 16 வார வெள்ளி கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து சந்தோஷி மாதாவை வழிபடுகின்றனர். வட இந்திய மாநிலங்களில் இந்த விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சந்தோஷத்தை அளிக்கும் பெண் கடவுள் என குறிப்பிடப்படும் சந்தோஷி மாதாவின் தீவிர பக்தையாக இருந்துள்ளார் பைஜந்தி.

Rajasthan Businessman who Built Temple to fulfill his wife wish

Images are subject to © copyright to their respective owners.

ஆசை

இந்த நிலையில், தங்களது சொந்த ஊரில் சந்தோஷி மாதாவிற்கு கோவில் கட்ட வேண்டும் என்ற ஆசை பைஜந்திக்கு வெகுநாட்களாகவே இருந்து வந்திருக்கிறது. இதனையடுத்து, தனது கணவர் கேதர் பாஷியிடம் இதுகுறித்து பேசியிருக்கிறார் பைஜந்தி. தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற நினைத்த கேதர் பாஷி உடனடியாக இதற்கான பணிகளில் இறங்கியுள்ளார்.

அதன்படி தனது மனைவியின் பூர்வீக கிராமமான மனிதாப்பூரில் கோவில் கட்டுமான பணிகளை துவங்கியுள்ளார் கேதர் பாஷி.

Rajasthan Businessman who Built Temple to fulfill his wife wish

Images are subject to © copyright to their respective owners.

7 கோடி ரூபாய்

15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சந்தோஷி மாதாவின் திருக்கோவில் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த கோவிலில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளுக்காக உள்ளூர் மற்றும் தமிழகத்தில் இருந்து அனுபவம் வாய்ந்த சிற்பிகளை வரவழைத்திருக்கிறார் கேதர் பாஷி. இந்த கோவில் கட்டுமானத்திற்கு அவர் இதுவரையில் 7 கோடி ரூபாய் செலவும் செய்திருக்கிறார். தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற கோவில் கட்டிய கணவரின் செயல் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

Also Read | பிரிந்து சென்ற மனைவியை சமாதானப்படுத்த வாட்டர் டேங்கில் ஏறிய கணவன்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு..!

Tags : #RAJASTHAN #RAJASTHAN BUSINESSMAN #BUILT TEMPLE #WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rajasthan Businessman who Built Temple to fulfill his wife wish | India News.