கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளிலேயே.. டிராபிக்கில் காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்த வாலிபர்.. அதிர்ச்சியில் உறைந்த மனைவி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Mar 10, 2023 05:43 PM

பெங்களூர் நகரின் பெரும் பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து தான் இருக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால், எதிர்பார்த்த நேரத்தை விட முன்னரே கிளம்பினால் தான் சென்று அடைய முடியும்.

man leave from car in traffic signal after next day of marriage

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஒரு மாசத்துக்கு முன் காணாம போன விமானத்தின் நொறுங்கிய பாகங்களுடன் கிடைத்த மனித உடல்கள்!!.. அதிர்ச்சி பின்னணி!!

அப்படி இருக்கையில், பெங்களூர் டிராபிக்கில் சிக்கிய போது திருமணமான மறுநாளில் மாப்பிள்ளை ஒருவர் காரில் இருந்து தப்பித்து சென்ற சம்பவமும் அதன் பின்னால் உள்ள காரணமும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரில் இருந்து இறங்கி ஓடிய வாலிபர்

பெங்களூரை சேர்ந்தவர் விஜய் ஜார்ஜ். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து திருமணமான மறுநாள் தனது மனைவியை அழைத்து கொண்டு காரில் அங்குள்ள சர்ச் ஒன்றில் ஜார்ஜ் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கே சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த சமயத்தில், ஜார்ஜ் வந்த கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது.

அந்த சமயத்தில், திடீரென காரின் முன்பக்கம் அமர்ந்திருந்த விஜய் ஜார்ஜ், கதவைத் திறந்து கொண்டு சாலையில் ஓட ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது. திடீரென கணவர் இப்படி செய்ததால் அவரது மனைவியும் காரில் இருந்து இறங்கி கணவனை விரட்டி பிடிக்க சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரால் கணவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

Bengaluru man leave from car in traffic signal after next day of marri

Images are subject to © copyright to their respective owners.

இது தான் காரணமா?

மேலும் ஜார்ஜின் மனைவி வீட்டுக்கு திரும்பினாலும் தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே இரு வீட்டாரும் ஜார்ஜை தேடி வந்த சூழலில் அவர் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஜார்ஜின் மனைவி போலீசிடம் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். திருமணமான மறுநாளே இப்படி ஒரு வாலிபர் செய்த விஷயம் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

அதே வேளையில், கணவர் ஜார்ஜ் இப்படி செய்ததற்கான காரணம் குறித்து அவரது மனைவி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பெண்ணுடன் பழக்கம்

விஜய் ஜார்ஜுக்கு திருமணத்திற்கு முன்பாக, கோவாவில் வேலை செய்த சமயத்தில் பெண் ஒருவருடன் பழக்கம் இருந்து வந்ததாகவும், திருமணத்திற்கு முன்பே அது பற்றி தன்னுடைய வருங்கால மனைவியிடம் தெரிவித்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதே போல திருமணத்திற்கு முன்னே அந்த உறவை துண்டித்ததால் ஜார்ஜ்ஜை திருமணம் செய்யவும் அந்த இளம்பெண் சம்மதித்துள்ளார்.

Bengaluru man leave from car in traffic signal after next day of marri

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து ஜார்ஜ் மற்றும் இளம் பெண்ணின் திருமணம் சமீபத்தில் நடந்தாலும் அந்த பெண்ணுடன் ஜார்ஜ் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஜார்ஜிடம் சேர்ந்து பழகிய சமயத்தில் எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் அந்த பெண்ணின் மிரட்டலுக்கு பயந்து கணவர் ஜார்ஜ் ஓடிவிட்டார் என்றும் அவரது மனைவி கருதுவதாக தெரிவித்துள்ளார். அதே போல விபரீத முடிவை எடுத்துக் கொள்ளும் மனநிலையிலும் இருந்தார் என்றும் பாதுகாப்பான முறையில் திரும்பி வருவார் என நம்பிக்கை இருக்கிறது என்றும் போலீசிடம் அந்த பெண் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | மேலே உயர்ந்த பந்து.. வேகமா ஓடி வந்த வீராங்கனை.. சட்டுன்னு நடந்த மேஜிக்.. மெய்சிலிரித்து பார்த்த ரசிகர்கள்!!.. வைரல் வீடியோ!!

Tags : #BENGALURU #MAN #CAR #TRAFFIC SIGNAL #MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man leave from car in traffic signal after next day of marriage | India News.