'30க்கும் அதிகமானோருடன் சென்றுகொண்டிருந்த பேருந்து'... 'திடீரென பற்றிய தீயால் அலறியடித்த பயணிகள்'... 'இறங்குவதற்குள் நிகழ்ந்த கோர விபத்து'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 12, 2020 10:14 AM

கர்நாடக மாநிலத்தில் தனியார் பேருந்து ஒன்று எரிந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Karnataka 5 Died In Private Bus Fire Accident In Chitradurga

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் அருகே உள்ள ஹிரியூர் என்ற இடத்தில் நேற்றிரவு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று 30க்கும் அதிகமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென அந்தப் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனால் பதறிப்போன பயணிகள் அலறியடித்து கீழே இறங்க முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவியதில், ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 27  பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Karnataka 5 Died In Private Bus Fire Accident In Chitradurga | India News.