Kadaisi Vivasayi Others

காதலனை நைசாக பீச்சுக்கு கூட்டி சென்ற காதலி.. நண்பர்களுடன் சேர்ந்து போட்ட பிளான்.. ஆடிப்போன போலீஸ்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Pandidurai T | Feb 10, 2022 03:19 PM

மும்பை: காதலனை கொலை செய்ய திட்டம் தீட்டிய காதலி மர்ம கும்பலை ஏற்பாடு செய்த சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Girlfriend arrested for killing boyfriend in Mumbai

அடேங்கப்பா..! ரூ.1 கோடி செலவில் தீவுக்கு ‘டூர்’ கூட்டிட்டு போகும் நிறுவனம்.. உச்சக்கட்ட உற்சாகத்தில் ஊழியர்கள்..!

மும்பை மாகிம் கடற்கரையில் அண்மையில் காதல் ஜோடியை கும்பல் தாக்கியது. இந்த சம்பவத்தில் இளைஞர் வாசிம்சவுத்ரிஉயிரிழந்தார். அவருடன் இருந்த 20 வயதான இளம்பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காதலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

காதலி சதி திட்டம்

காதலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவண்டியை சேர்ந்த பால்கிருஷ்ணா மற்றும் கம்ரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காதலன் வாசிம் சவுத்ரி கொலைக்கு அவரது காதலியே மூளையாக செயல்பட்டுள்ளார்.  வாசிம் சவுத்ரி காதல் என்ற பெயரில் பல பெண்களுடன் பழகி வந்ததாக தெரிகிறது.

கடற்கரையில் கொலை சம்பவம்

இதனால் வாசிம் சவுத்ரியின் நடத்தையில் சந்தேகப்பட்ட காதலி அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, பால்கிருஷ்ணா, கம்ரன் ஆகியோரின் உதவியை நாடியுள்ளார். அவர்களின் திட்டப்படி சம்பவத்தன்று இரவு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு காதலனை இளம்பெண் அழைத்து சென்றுள்ளார். அப்போது, அப்பெண் நண்பர்களுடன் சேந்து இளைஞரை தாக்கி கொலை செய்துள்ளார்.  மேலும், தன் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அப்பெண் தன்னை, தானே காயப்படுத்திக்கொண்டு மர்ம நபர்கள் தாக்கியதாக நாடகமாடியுள்ளார்.

Girlfriend arrested for killing boyfriend in Mumbai

கொலைக்கு உடந்தையாக இருந்த பெண்

இந்த கொலைக்கு வாசிம் சவுத்ரியின் உறவினர் பெண்ணான ஹினா சேக் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். ஹினா சேக் தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் வாசிம் சவுத்ரியை பழிவாங்க இந்த கொலைக்கு உதவியது உறுதியாகியுள்ளது. மேலும், போலீசார் கொலையில் தொடர்புடைய வாசிம் சவுத்ரியின் காதலி, ஹினா சேக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் தற்போது மருத்துவ சிகிச்சையில் இருந்தால் சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

"இந்த டீ -க்கு விலையே கிடையாது" ஆனந்த் மஹிந்திரா போட்ட லேட்டஸ்ட் ட்வீட்..!

Tags : #MUMBAI #LOVERS #GIRLFRIEND KILLED #BOY FRIEND DEATH #POLICE ARRESTED #POLICE INVESTIGATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Girlfriend arrested for killing boyfriend in Mumbai | India News.