பெண் ஊழியரின் தலைமுடியை இழுத்து.. தரையில் தள்ளி சரமாரியாகத் தாக்கும் சக ஊழியர்! அதிர்ச்சி வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 30, 2020 05:27 PM

பெண் ஊழியரை ஆந்திராவில் சுற்றுலாத்துறை துணை மேலாளரை, மாஸ்க் அணிந்து கொண்டு பேச வேண்டும், என்று அவர் கூறியதற்காக கொடூரமாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

emplyoee beat up a woman colleague over corona mask

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள சுற்றுலா துறை விடுதியில் பாஸ்கர் ராவ் என்பவர் , துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் ராவ் வேலை விஷயமாக, அதே விடுதியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் உஷாராணியிடம் பேசியிருக்கிறார்.

அந்த சமயத்தில், உஷாராணியோ, “முகத்துல கவசம் அணிவதை கடைபிடியுங்கள். அப்படி கவசம் அணியாமல் என் உட்பட யாரிடமும் பேசாதீர்கள்” என அறிவுறுத்தியுள்ளார். ஆனால் உஷாராணியின் அறிவுறுத்தலால் பாஸ்கர் ராவ்க்கும் உஷாராணிக்கும் வார்த்தைப் போர் மூண்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் ராவ்,  உஷாராணியின் தலைமுடியை பிடித்து இழுத்து, சரமாரியாக தாக்கியுள்ளார்.  அவர் தாக்கியதில் கீழே விழுந்த உஷா ராணி, அலறித் துடிக்க, அப்போதும் தொடர்ந்து உஷா ராணியை பாஸ்கர் ராவ் துன்புறுத்தியுள்ளார். இச்சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

இது தர்க்கா மிட்டா காவல் நிலையத்தில், உஷாராணி, பாஸ்கர் ராவ் மீது அளித்த புகாரின் பேரில் அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த ஆந்திர மாநில சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகளும் துணை மேலாளர் பாஸ்கர் ராவ் மீது

கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Emplyoee beat up a woman colleague over corona mask | India News.