வாடிக்கையாளர்களுக்கு 'ஷாக்' கொடுத்த ஐசிஐசிஐ வங்கி...! - எல்லாத்தையும் 'அங்க' ஸ்டாப் பண்றோம்...!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Issac | Oct 25, 2020 09:27 PM

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தங்கள் செயல்பாடுகளை இலங்கையில் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

ICICI Bank announced it will close operations in Sri Lanka.

இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, கத்தார், சீனா போன்ற நாடுகளிலும் செயல்பட்டு வரும் பிரபல தனியார் வங்கியான ஐசிஐசிஐ, இலங்கையிலும் ஐசிஐசிஐ வங்கி தனது கிளைகளைக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இலங்கையின் மத்திய வங்கியிடம் தனது செயல்பாடுகளை நிறுத்த அனுமதிக்க கோரி ஐசிஐசிஐ வங்கி விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐசிஐசிஐ வங்கி இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த இலங்கை மத்திய வங்கி, இலங்கையில் வங்கியின் வணிக நடவடிக்கைகளை நிறுத்தவும் வங்கிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

அதனையடுத்து கடந்த அக்டோபர் 23ஆம் தேதி முதல் இலங்கையில் தனது வங்கிச் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BANK #ICICI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. ICICI Bank announced it will close operations in Sri Lanka. | Business News.