www.garudabazaar.com

தோழி பலி! கார் விபத்தால் தீவிர சிகிச்சை.. யாஷிகா மீது காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர்.

Yashika Aannand car accident police filed case in 3 sections

இவர் நேற்று நள்ளிரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில்  நண்பர்களுடன் காரில் சென்றபோது, மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி கார், கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழி, வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.  இதனிடையே இந்த விபத்தில் காயம் அடைந்த யாஷிகாவும் அவருடைய நண்பர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மாமல்லபுரம் அருகே நடந்த இந்த கார் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் யாஷிகா ஆனந்த் மீது அதி வேகமாக கார் ஓட்டியது தொடர்பாகவும், இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி மரணம் அடைந்தது தொடர்பாகவும், 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ALSO READ: யாஷிகா ஆனந்தின் Car விபத்தில் நடந்தது என்ன? பலி ஆன தோழி யார்? வெளியான பரபரப்பு Video!

Yashika Aannand car accident police filed case in 3 sections

People looking for online information on Yashika Aannand, Yashika Aannand Car Accident will find this news story useful.