''சூர்யாவுக்கு நடந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை'' - தளபதி விஜய்யின் அப்பா கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 40 ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய சூர்யா,  அரசின் புதிய கல்வி கொள்கையை விமர்சித்தார். இவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

Vijay's father S.A.Chandrashekar supports Suriya for his opinion

இதனையடுத்து இயக்குநர் சங்கத்தின் தேர்தலில் வாக்களிக்க வந்த இயக்குநரும் தளபதி விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர், நம் நாட்டில் எப்படினா நல்ல கருத்துக்களை பேசக் கூடாது.

நல்ல கருத்துக்களை பேசக்கூட, சுதந்திர நாட்டில் இருந்து கொண்டு சுதந்திரம் இல்லாம இருக்கிறோம். அது எல்லோருக்கும் நடந்துகொண்டு இருக்கிறது. அதனால் சூர்யாவுக்கு நடந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் தொடர்ந்து நல்ல விஷயங்களை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். என்றார்.