"வாழ்க்கைல எடுத்த தப்பான முடிவு?.. இந்த சீரியல் தான்".. 'பாரதி கண்ணம்மா' வெண்பா பரபரப்பு பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் பரபரப்பாக எப்போதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல்.

this serial is wrong decision in bharathi kannamma venba life

இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் பிரிவுக்கு முக்கியமான காரணமாக அமையும் முக்கிய கேரக்டர் வெண்பா. இந்த வெண்பா கேரக்டர்தான் இந்த சீரியலில் வில்லி கேரக்டர். பாரதிக்கும் கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தைகளான லட்சுமி மற்றும் ஹேமா இருவரில், லட்சுமி கண்ணம்மாவின் குழந்தையாக நேரடியாக வளர்கிறார். ஹேமா பாரதியின் வளர்ப்பு குழந்தையாக வளர்கிறார்.

இந்த இருவருமே தங்களுடைய குழந்தைகள் தான் என்பது பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்குமே தெரியாது. ஆனால் பாரதியின் பெற்றோருக்கு எல்லா விஷயங்களும் தெரியும். இப்படி பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் இந்த சீரியலில் வெண்பா எனும் கேரக்டராக நடிக்கும் ஃபரீனா தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். கர்ப்பமாக இருந்தபடியே எல்லா காட்சிகளிலும், அவர், தான் கர்ப்பம் தரித்திருப்பதை காட்டிக்கொள்ளாமல் நடித்துவருகிறார்.

ரசிகர்கள் பலரும் எப்படி இப்படி நடிக்கிறீர்கள்? என்று அவரிடம் தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்களுடன் ஒரு நேரலை அமர்வில் இணைந்த ஃபரீனா, அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். தம்முடைய பாசிட்டிவ் எண்ணமும், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் மனநிலையும்தான் தான் சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் மிகவும் கஷ்டமான காட்சியாக தனக்கு இருந்தது அண்மையில் பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் ஒரு முக்கிய காட்சிதான் என்று குறிப்பிட்ட ஃபரீனா, குறுகலான தெருக்களில் மிக வேகமாக நடந்து செல்லும் போது மிக கடினமாக இருந்ததாகவும், எப்படியோ தானும் கண்ணம்மாவும் அதை மேனேஜ் செய்து விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதே போல், “உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த ஒரு தவறான முடிவு?” என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, “நாச்சியார்புரம்” என்ற ஒற்றை பதில் அளித்திருக்கிறார் ஃபரீனா.

‘நாச்சியார்புரம்’ சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த சீரியலில் ரச்சிதாவின் கணவர் நடித்திருந்தார். ரச்சிதா சரவணன் மீனாட்சி மற்றும் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் புகழ்பெற்று, பிரபலமாக நடித்து வரும் இளம் நடிகை. இந்த ‘நாச்சியார்புரம்’ சீரியலை குறிப்பிட்டு தான், தன் வாழ்க்கையில் தான் எடுத்த தவறான முடிவு என்பதாக வெண்பா பதில் அளித்திருக்கிறார்.

இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும் இதற்கான காரணம் அல்லது விளக்கம் குறித்து ஃபரீனா தெரிவிக்கவில்லை. இதனிடையே பாரதி கண்ணம்மாவில் கண்ணம்மாவின் இரட்டை குழந்தை விவகாரம் பற்றி கண்ணம்மாவுக்கு தெரிய வர, அந்த இன்னொரு குழந்தை பற்றி தனக்கு தெரியும் என்று வெண்பா கண்ணம்மாவை பொய்யாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

இதுபற்றி பாரதியிடம் நேரடியாக சென்று கண்ணம்மா முறையிட்டு, தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த காட்சிகள் அடுத்தடுத்து பரபரப்பாகி வருகின்றன.

"வாழ்க்கைல எடுத்த தப்பான முடிவு?.. இந்த சீரியல் தான்".. 'பாரதி கண்ணம்மா' வெண்பா பரபரப்பு பதில்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

this serial is wrong decision in bharathi kannamma venba life

People looking for online information on Barathi Kannamma, Barathi Kannamma Serial Promo, Barathi Kannamma Serial Today, Fareena, Trending, Venba, Vijyay Television will find this news story useful.