www.garudabazaar.com

“வாழு, வாழ விடு... நிபந்தனையற்ற அன்பை உரித்தாக்குகிறேன்!” - அஜித்தின் பரபரப்பு அறிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தல அஜித் தம் திரைப்பயணத்தை தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

Thala Ajith viral statement to fans and all ajithismtrendonaug2

இந்நிலையில் தமது ரசிகர்களுக்கு தமது பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா மூலமாக நடிகர் அஜித் குமார் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.  அதில், “ரசிகர்கள், விமர்சகர்கள், நடுநிலையார்கள் நாணயத்தின் மூன்று பக்கங்கள்.

ரசிகர்களின் அளவு கடந்த அன்பையும், விமர்சகர்களின் விமர்சனத்தையும் ஏற்கிறேன். வாழு, வாழ விடு... அனைவருக்கும் நிபந்தனையற்ற அன்பை உரித்தாக்குகிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தல அஜித் எச்.வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்திருந்தார்.  பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில்,  எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை.

 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் சிங்கிள் பாடலான ‘நாங்க வேற மாரி’ பாடல் வெளியாகி ரெக்கார்டு பிரேக்கிங் சாதனைகளை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: “ஹாரர், திரில்லர் வேணாம்னு முடிவு பண்ணோம்!”.. சித்தார்த்தை இயக்கிய நவரசா இயக்குநர்!

தொடர்புடைய இணைப்புகள்

Thala Ajith viral statement to fans and all ajithismtrendonaug2

People looking for online information on Ajith Kumar, ThalaAjith will find this news story useful.