'நாலு பேரு உதச்சா வாங்கிக்கத்தான் வேணும்' - பிக்பாஸில் கவின் குறித்து பிரபல நடிகர் அதிரடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய(ஆகஸ்ட் 24) தினம் போட்டியாளர்களிடையே கமல் பேசினார். அப்போது உங்களது லக்ஷரி பட்ஜெட் மதிப்பெண்கள் ஏன் குறைந்தது தெரியுமா என்று போட்டியாளர்களை கேட்டார்.

S.Ve.Shekher speaks about Kamal Haasan, Kavin, Losliya's Bigg Boss 3

பின்னர் குறும்படம் ஒன்றை கமல் போட்டுக்காட்டினார். அதில், லாஸ்லியாவும், கவினும் மைக் பேட்டரியை கழட்டி வைத்துவிட்டு பேசுகின்றனர். அதனை பார்த்த மற்ற போட்டியாளர்கள் கடும் அதிர்ச்சியடைகின்றனர். பின்னர் கவின் லாஸ்லியா இருவரையும் கமல் கடுமையாக எச்சரிக்கிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் குறித்தும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் நடிகர் எஸ்.வி.சேகர் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சரவணன் தனது சிறிய வயதில் அறியாமையில் நிகழ்ந்ததை தெரிவித்திருக்கிறார். சரவணன் சொன்னதற்கு அவரை நீக்கினார்கள். ஆனால் அதற்கு பரவாயில்லையே என்ற கமலை நீக்கவில்லையே என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். சரவணன் தான் செய்ததை வீரமாக சொல்லவில்லை. அந்த வயதில் நான் பக்குவமில்லாமல் செய்துவிட்டேன் என்கிறார்.

நான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனா கமல் தான் என்னுடைய போட்டியாளர். கமல் வரலைனா நான் போய் பண்ணுவேன் வீட்டுக்குள்ள போகமாட்டேன். அதுல கவின் நாலு பேர லவ் பன்றேன். ஜாலியா இருக்கும் என்கிறார். அதே போல நாலு பேரு உதச்சா வாங்கிக்க தான் வேணும். என்னைப் பொறுத்தவரை எந்தவொரு நிகழ்ச்சியும் தனிமனித ஒழுக்கத்துக்கு எதிரா வந்ததுனா பிற்காலத்தில் அது அவங்களையே பாதிக்கும். என்றார்.

'நாலு பேரு உதச்சா வாங்கிக்கத்தான் வேணும்' - பிக்பாஸில் கவின் குறித்து பிரபல நடிகர் அதிரடி! வீடியோ