''வரிசையாக 6 படங்களில் இருந்து வெளியேற்றப்பட்டேன்'' - 'நாயகி' வித்யா பிரதீப் வேதனை பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சைவம்', 'பசங்க 2' உள்ளிட்ட படங்களின் முக்கிய வேடங்களில் நடித்தவர் வித்யா பிரதீப். மகிழ் திருமேணி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான 'தடம்' படத்தில் போலீஸ் வேடத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்.

சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான 'பொன்மகள் வந்தாள்' படத்தில் அவர் நடித்த வேடத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'நாயகி' தொடரின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''தடம்' படத்துக்கு முன்பு 6 படங்களில் இருந்து வெளியேற்றப்பட்டேன். தொழில்முறை காரணங்களும் இல்லாமல் நான் வெளியேற்றப்பட்டேன். இதன் காரணமாக என் மனம் உடைந்தது. அப்பொழுது திரைப்படங்கள் எனக்கான துறை இல்லை என்று என் படிப்பில் கவனம் செலுத்தினேன்.

அப்பொழுது 'தடம்' படத்தின் கதாப்பாத்திர தேர்வுக்காக அழைக்கப்பட்டேன். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அந்த திரைப்பட அலுவலகம் நுழைந்தேன். மகிழ் சாரை சந்தித்தேன். அவர் என்னிடம் கடந்த சில மாதங்களாக இந்த படத்துக்கான கதாப்பாத்திர தேர்வு நடைபெற்று வருகிறதாகவும், இது மிகவும் முக்கியமான கேரக்டர் என்றும் தெரிவித்தார். என் கண்கள் பவர்ஃபுல்லாக இருப்பதாக பாராட்டினார். எனக்குள் நம்பிக்கை பிறந்தது. நான் இந்த வேடத்துக்கு தேர்வு செய்யப்பட்டேன்.

மகிழ் சார் மிகவும் தொழில்முறையுடன் அணுகக் கூடியவர். ஒவ்வொரு ஷாட்டின் இறுதியிலும் நீங்கள் ஒரு மேஜிக் என்பார். அவரால் ஒரு நடிகரிடம் இருந்து சிறந்த நடிப்பை அன்பாகவும் மரியாதையாகவும் வாங்க முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

For description please read my two comments below due to space limit👇🙏

A post shared by Vidya Pradeep (@vidya.pradeep01) on

Sun TV Nayagi fame Vidya Pradeep Emotional post about Arun Vijay's Thadam | அருண் விஜய்யின் தடம் படம் குறித்து நாயகி வித்யா பிரதீப் உருக்கம�

People looking for online information on Magizh Thirumeni, Thadam, Vidya Pradeep will find this news story useful.