சிவகார்த்திகேயன் படத்தின் ரூட் கிளியர் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இரண்டாவதாக உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் சென்சார் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan Producing Nenjamundu Nermaiyundu Odu Raja has been censored U

சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமான படம் 'கனா'. மகளிர் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான இந்த படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் படம் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தில் விஜய் டிவி பிரபலம் ரியோ ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், இப்படத்தில் ஷிரின் காஞ்வாலா, ராதாரவி, ஆர்.ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் பிரபல யூடியூப் சேனலான பிளாக் ஷீப் மற்றும் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படம் சென்சாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது சென்சாரில் இப்படத்திற்கு ‘யு’சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. யு.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூன்.14ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.