வீடு தொடர்பான சர்ச்சை - அம்மாவுக்கு சங்கீதா உருக்கமான கடிதம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பிதாமகன்', 'காளை', 'மன்மதன் அம்பு' படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுபவர் சங்கீதா. இவர் பாடகர் மற்றும் நடிகர் கிரிஷ்ஷை  திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது.

Sangeetha Krish Clarifies about her Mother's home issue

இந்நிலையில் சங்கீதாவின் தாய் பானுமதி, 'தான் வசித்துவரும் வீட்டை அபகரிக்க முயல்வதாக சங்கீதா மீது தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சங்கீதாவும், கிரிஷும் மகளிர் ஆணையத்தில் ஆஜரானார்கள்.

அதனைத் தொடர்ந்து இந்த சர்ச்சை தொடர்பாக சங்கீதா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

அம்மா, என்னை இந்த உலகிற்கு அழைத்து வந்ததற்காக நன்றி. எனது பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு 13 வயதிலேயே வேலையில் சேர்த்தற்கு நன்றி. வெற்றுக் காசோலைகளில் நீ காட்டியே இடமெல்லாம் கையெழுத்து போட வைத்தமைக்கு நன்றி

வேலைக்கே செல்லாமல், உழைக்கவே தெரியாமல் வளர்ந்த உனது மகன்கள், மது அருந்துவதற்காக என்னை கஷ்டப்படுத்தியதற்கு நன்றி. நான் உன்னிடம் சண்டை போட்டு பிரியும் வரை எனக்கு செய்து வைக்காமல் இருந்ததற்கு நன்றி. எனது கணவருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து எனது குடும்ப அமைதியையும் கெடுத்தற்கும் நன்றி.

கடைசியாக என் மீது போலியான புகார்களை அடுக்கிக்கொண்டிருப்பதற்கும் நன்றி. ஏனெனில் தெரிந்தோ தெரியாமலோ நீ என்னை ஒரு மவுனக் குழந்தையில் இருந்து போராளியாக முதிர்ச்சியான பார்வை கொண்டவராக உருவாக்கி இருக்கிறாய். உன்னால் தான் துணிச்சலான பெண்ணாக இருக்கிறேன். இந்த ஒரு காரணத்திற்காக நான் எப்போதும் உன்னை நேசிப்பேன். இவ்வாறு சங்கீதா அதில் குறிப்பிட்டுள்ளார்.