''கத்திக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளோம்'' - தனது 75வது படம் குறித்து நடிகை ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கத்தி' படத்தில் சமந்தா, 'ஐ' படத்தில் எமி ஜாக்சன் என தமிழின் முன்னணி ஹீரோயின்கள் பெரும்பாலானோருக்கு டப்பிங் பேசி வருபவர் ரவீனா ரவி. இவர் விதார்த் ஜோடியாக 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் நடித்துள்ளார்.

Raveena Ravi about Director Venkat Mohan in Vijay's Kaththi and Vishal's Ayogya

மேலும், 'தரமணி' படத்தில் ஹீரோவாக நடித்த வசந்த் ரவி நடிக்கும் 'ராக்கி' உள்ளிட்ட படங்களில் அவர் தற்போது நடித்துவருகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விஷாலின் அயோக்யா படத்தின் இயக்குநர் வெங்கட் மோகனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

அதில், ''அயோக்யா மிகவும் முக்கியமான படம். ராஷி கண்ணாவிற்கு குரல் கொடுத்திருக்கிறேன். மோகனுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி.  ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான அவருடன் 'கத்தி'க்கு பிறகு 'அயோக்யா'வில் மீண்டும் இணைந்து பணிபுரிந்துள்ளேன்.  கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்துவருவதன் அடிப்படையில் இது எனக்கு 75 ஆவது படம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.