ஷூட்டிங் முடியும் முன்னே உயிரிழந்த பிரபல தமிழ் இயக்குநர் - பிரபல நடிகை சொன்ன தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் ஒருபுறம் அச்சுறுத்திக் கொண்டிருக்க, கடந்த சில மாதங்களாக திரையுலக பிரபலங்களின் மரண செய்திகள் அடிக்கடி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Popular director Passes away befor his movie release | தனது படம் ரிலீஸ் ஆகும் முன்னே உயிரிழந்த பிரபல இயக்குநர்

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருந்த '4ஜி' பட இயக்குநர் அருண் பிரசாத் சாலை விபத்தில் மரணமடைந்தார். படம் இன்னும் வெளியாகாத நிலையில் இயக்குநர் மரணமடைந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அதிர்ச்சியில் இருந்து திரையுலகினர் மீளும் முன்னரே மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.  புதுமுக இயக்குநர் பாலமித்ரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் 'உடுக்கை' என்ற படத்தை இயக்கிவந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 நாட்கள் மீதமுள்ளதாம். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவந்துள்ளது. இதுகுறித்து இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சஞ்சனா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய உடுக்கை பட இயக்குநர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மிகவும் இனிமையான மனிதர். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.

Popular director Passes away befor his movie release | தனது படம் ரிலீஸ் ஆகும் முன்னே உயிரிழந்த பிரபல இயக்குநர்

People looking for online information on Balamithran, Sanjana Singh, Udukkai will find this news story useful.