சீனர்களை மோசமாக 'திட்டி' பதிவிட்ட பிரபல நடிகை... "கொரோனா வந்தும் திருந்தலையா"...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சீனர்களை மோசமாக திட்டி பதிவிட்ட பிரபல நடிகை Popular Actress Slams Chinese For this reason

இந்நிலையில் முதலில் பாதிக்கப்பட்ட சீனா தேசம், தான் இந்த கொடும் நோயில் இருந்து மீண்டு விட்டதாக கூறி ஊரடங்கு தடையை தளர்த்தி இருக்கிறது. மேலும் தனது சந்தைகளை மீண்டும் மக்களுக்கு திறந்து இருக்கிறது. குறிப்பாக மீண்டும் நாய், பூனை, எலி போன்ற இறைச்சிகள் விற்பனை ஆகிறதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பல மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை ஷ்ரத்தா தாஸ் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில் "நாய், பூனை, கரப்பான், எலி வேறு என்ன இருக்கிறது. மனிதர்களையும் சாப்பிட்டு விடுங்களேன். கொரோனா வந்த பிறகும் இப்படியா. திருந்தவே  மாட்டீர்களா.." என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor