பிரபல நடிகரின் பாசப் போராட்டம்... தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் தவிப்பு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் தந்தை மரணம் அடைந்துள்ளார். ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பாடகர், தயாரிப்பாளர், சமூக சேவகர், தொகுப்பாளர் போன்ற பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். மேலும் ராஜ்யசபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இரண்டு முறை பிலிம்பேர் விருது, மற்றும் 3 முறை தேசிய விருதும் பெற்றவர். ஸ்டைல் நடிகர் என்று கூறப்படும் இவர், தனது ஆக்ஷன் காட்சிகளால் மக்களை ரசிக்க வைத்தவர்

தந்தையின் இறுதி சடங்கில் கூட பங்கேற்க முடியாமல் தவிக்கும் நடிகர் popular actor suffers from fathers death and not able to perform last r

இந்நிலையில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் தகப்பனார் பசந்தகுமார் சக்கரவர்த்தி கடந்த செவ்வாய்க்கிழமை காலை மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 95. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் இயற்கை எய்தினார். கொரோனா ஊரடங்கு காரணமாக பெங்களூருவில் சிக்கியிருக்கும் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி தன் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்குகொள்ள முடியாமல் தவித்து வருகிறார்.

எப்படியாவது மும்பை சென்று சேர வேண்டும் என்று முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக பிரபல நடிகை ரித்துப்பர்னா சென்குப்தா தனது ட்விட்டர் தளத்தில் "நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். தைரியமாக இருங்கள். உங்கள் தந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor