கமலுக்கும் எனக்குமான உறவு இதுதான் - பூஜா குமார் பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூஜா குமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய திரைப்படத்துறையில் நடித்து வருகிறார். கமலுடன் ‘விஸ்வரூபம் 2’ படத்தில் 2018-ஆம் ஆண்டில் நடித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக பூஜா குமார் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டார்.

pooja kumar opens up relationship with kamal interview

பிஹைண்ட்வுட்ஸுடனான பிரத்யேக பேட்டியில், பூஜா தனது திரையுலக வாழ்க்கை மற்றும் உலக நாயகனுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி மனம் திறந்தார். கமல் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானை இருவரையும் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தின் ஒரு அமர்வின் போது சந்தித்தார். அந்த அனுபவத்தைப் பற்றி பேசுகையில், “நான் அங்கதான் உட்கார்ந்திருந்தேன், அவங்க ரெண்டு பேருக்கும் இருந்த இணக்கத்தை பாத்தேன். அதனாலதான் இப்படியொரு அற்புதமான இசை உருவாக்க முடிஞ்சுது. அதுவும் ரொம்ப நேச்சுரலா. ” என்றார்.

திரையுலகிலிருந்து கமலின் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்குபெறுபவர்களில் மிகச் சிலரில் பூஜாவும் ஒருவர். கமலுடனும் அவரது குடும்பத்தினருடனும் அவருக்குள்ள உறவைப் பற்றி பேசிய பூஜா, “கமல் சாரையும் அவரது குடும்பத்தினரையும் ரொம்ப நாளா தெரியும். நான் அவரோட நடிக்கத் தொடங்கியதிலிருந்து, குடும்பத்தாருக்கும் பரிச்சயம் ஆனேன். தயாரிப்பாளராக இருக்கும் அவரது சகோதரர், அவரது மகள்கள், எல்லாரும் அப்படித்தான் பழக்கமானாங்க. இப்ப அவங்க குடும்ப நிகழ்ச்சிகள்லேயும் பங்கெடுத்துக்கறேன் ”

கமலின் அடுத்த படமான ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் நடிக்கிறாரா என்று கேட்கப்பட்ட போது, ​​“இல்லை, நான் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. இதுவரை எதுவும் ஃபிக்ஸ் இல்லை, ஆனால் யாருக்கு தெரியும்.” என்றார். பூஜா இந்தப் படத்தில் இணைந்தார் என்றால் அவரது  ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

‘விஸ்வரூபம்’ அனுபவம் குறித்தும், அவரது ‘ஹே ராம்’ தருணங்கள் குறித்தும் நிறைய பேசினார். முழுவதையும் காண இந்த வீடியோவைப் பாருங்கள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

pooja kumar opens up relationship with kamal interview

People looking for online information on Kamal Haasan, Pooja Kumar will find this news story useful.