www.garudabazaar.com

கொஞ்சம் கூட 'பொறுப்பில்ல'... எல்லாத்துக்கும் அவர் தான் காரணம்... வறுக்கும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் அளித்த எவிக்சன் பிரீ பாஸை ஆஜீத் பொறுப்பில்லாமல் வைக்க, அதை எடுத்த பாலாஜி பிக்பாஸிடம் வாக்குமூலம் அளித்தார். இதனால் இனி ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான். அதை வைத்து சிறிதுநேரம் விளையாடி விட்டு பின்னர் ஆஜீத்திடம் கொடுத்து விட்டார்.

Nisha suddenly cried in Bigg Boss House, Twitter Reacts

தொடர்ந்து மீண்டும் அந்த பாஸ் ஜித்தன் ரமேஷ், ஆரி வசம் வந்தது. (சின்ன பசங்க கிட்ட கொடுத்தா இப்படித்தான் பாஸ்) அதை வைத்து அவர்கள் விளையாட்டு காட்ட, அதை தாங்க முடியாத நிஷா அந்த பாஸை வாங்கி ஆஜித்திடம் கொடுத்து விட்டார். இதைப்பார்த்த ஆரி டென்ஷன் ஆக, நிஷா அழுக, கடைசியாக ரமேஷ் அவரை சமாதானம் செய்தார்.

தொடர்ந்து மீண்டும் நிஷாவிடம் அந்த பாஸ் வந்தது. அவர் அதை ஆரியிடம் கொடுக்க ஆரி,ஆஜித்திடம் கொடுத்தார். முதலில் மறுத்த ஆஜித் பின்னர் அந்த பாஸை பெற்றுக்கொண்டார். நிஷாவின் அழுகையால் பிக்பாஸ் வீடு சிறிது நேரம் கலவரமானது. இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த ஆரி ஏன் இவ்ளோ டென்க்ஷன் ஆகுறாரு? இவ்ளோ சீன்லாம் தேவையில்லை பாஸ் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த பாஸ் மட்டும் தலைவர் சுரேஷ் கையில கெடைச்சு இருந்தா? 

தொடர்புடைய இணைப்புகள்

Nisha suddenly cried in Bigg Boss House, Twitter Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.