www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டில் வெளியேறிய பிறகு... நிஷாவின் முதல் பதிவு... "நான் அப்படி நெனச்சேன், ஆனா.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்படியே சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட, நேற்றைய தினம் அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஆரம்பத்தில் நம்பிக்கையான போட்டியாளராக இருந்த நிஷா "சில காரணங்களால் அவர் போட்டியை சரியாக புரிந்து கொள்ளவில்லை" என்று சக போட்டியாளர்களே பேசுவதையும் காண முடிந்தது.

நிஷாவின் முதல் பதிவு nisha first post after biggboss

மேலும் சிலர் "அவர் ரியோ மற்றும் அர்ச்சனாவின் சார்பாக தான் அவர் விளையாடுகிறார்" என்பது போன்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் நிஷா வெளியேறிய பின்பு முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் "அன்பு உறவுகளுக்கும் வணக்கம் ♥️ நான் யாரையும் காயப்படுத்த கூடாது என்று நினைத்தேன். இன்று நான் காயபட்டு விட்டேன். தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நிஷாவின் முதல் பதிவு nisha first post after biggboss

People looking for online information on Aranthangi Nisha, Biggboss4tamil will find this news story useful.