''ஊரடங்கு நேரத்துல சும்மா கூட இருக்கலாம், தப்பில்ல..'' - நீயா நானா கோபிநாத் செம மாஸ் ஸ்பீச்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் கொடுத்த பிரத்யேக பேட்டியில், பல விஷயங்களை அருமையாக பேசியுள்ளார். 

நீயா நானா கோபிநாத் செம ஸ்பீச் | neeya naana gopinath exclusive interview about lockdown, ajith, vijay and many

நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் கோபிநாத். இந்நிகழ்ச்சி இவருக்கென தனி ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது. மேலும் இவர் ஜீவாவின் திருநாள் படத்திலும் நடித்தார். இதுமட்டுமின்றி கோபிநாத்தின் மோட்டிவேஷனல் ஸ்பீச்சுக்கு தனி ரசிகர்கள் உண்டு. 

இந்நிலையில் பிகைன்ட்வுட்ஸ் தளத்திற்காக வீட்டில் இருந்தபடி பிரத்யேகமாக அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'இந்த லாக்டவுன் நேரத்தில், எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும், புதிதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று எல்லாம் இல்லை, தினமும் நாம் செய்ய தவறும் சின்ன சின்ன வேலைகளை கூட செய்யலாம், அப்படி சும்மா இருப்பதில் ஒன்றும் தப்பில்லை, மேலும் குழந்தைகள் ரொம்பவே பிசியாக தான் இருக்கிறார், ஆன் லைன் க்ளாஸ், வீடியோ கால் என அவர்கள் நேரம் பிசியாகவே நகர்கிறது'' என அவர், தன் மகளுடன் செல்ல சண்டையுடன் தெரிவித்தார்.

மேலும் அஜித்தை பேட்டியடுத்த போது நடந்த நினைவுகளையும் அவர் பகிர்ந்துகொண்டார். ஒவ்வொரு வார்த்தையிலும் அஜித் எப்படி கவனம் கொண்டு பேசினார் எனவும், ஒரு நட்சத்திரம் போல் இல்லாமல் எப்படி இயல்பாக  பழகினார் எனவும் தெரிவித்தார். மேலும் நடிகர் விஜய்யை பேட்டி எடுத்தது குறித்து அவர் பேசினார். இதுமட்டுமின்றி, வாழ்க்கை குறித்தும் வாழ்தல் குறித்து மிக அருமையான ஒரு மோட்டிவேஷன் ஸ்பீச்சையும் அவர் கொடுத்தார். 

 

''ஊரடங்கு நேரத்துல சும்மா கூட இருக்கலாம், தப்பில்ல..'' - நீயா நானா கோபிநாத் செம மாஸ் ஸ்பீச். வீடியோ

Entertainment sub editor