''பொன்னியின் செல்வனுக்காக தான் தாடி வளர்க்குறேன்'' - பிரபல நடிகர் அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் படமாக்கி வருகிறார். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றன.

Mohan Ram to act in Maniratnam, Vikaram's Ponniyin Selvan

இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, திரிஷா, சரத்குமார், அஷ்வின, லால், அர்ஜூன் சிதம்பரம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் திரைக்கதையை மணிரத்தனத்துடன் இணைந்து குமாரவேல் எழுதியுள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி முதல் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் பிரபல நடிகர் மோகன் ராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நண்பர்களே இந்த தாடி பொன்னியின் செல்வனுக்காக தான். அடுத்த வரும் ஜூன் வரை இப்படித்தான் இருப்பேன்'' என்றார்.

Entertainment sub editor