நரகாசூரனின் ரிலீஸ் குறித்த ரசிகரின் கேள்விக்கு கார்த்திக் நரேன் அதிரடி பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அந்த படத்துக்கு விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க, கார்த்திக் நரேனின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

Karthick Naren Announced Arvind Swami's Naragasooran release date

அதனைத் தொடர்ந்து அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சுதீப் கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் 'நரகாசூரன்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ஸ்ரத்தா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. சில காரணங்களால் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

அதனைத் தொடர்ந்து அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் மாஃபியா படத்தை இயக்கியுள்ளார். லைக்கா புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கார்த்திக் நரேனின் இன்ஸ்டாகிராம் பதிவில், ரசிகர் ஒருவர் நரகாசூரன் எப்பொழுது வெளியாகும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், உறுதியாக மார்ச் 2020ல் வெளியாகும் என்று குறிப்பிட்டார்.

Entertainment sub editor