www.garudabazaar.com

அப்பா குடிச்சதுனால தான் இப்படி ஆகிடுச்சா?.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மயில்சாமி மகன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மயில்சாமி கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், சினிமா பிரபலங்களை தாண்டி பொது மக்கள் பலரையும் கூட கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

Mayilsamy sons about rumour on his father drinking habits

Also Read | மயில்சாமி இறப்பில் 10 செகண்ட் மட்டுமே அழுத அவரது மகன்.. அருண் விஜய்க்கு போன் செய்து உருக்கம்..

சினிமாவில் பெரும்பாடு பட்டு, தனக்கென ஒரு இடத்தை மயில்சாமி பிடித்துக் கொண்ட சூழலில், அவர் காமெடியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்த பல காட்சிகள் என்றும் மக்கள் மனதில் இருந்து நீங்காதவை. சிறந்த நடிகர் என்பதை தாண்டி, யாராக இருந்தாலும் உதவி என கேட்டு வந்தால், தன்னிடம் இருப்பதையும் கொடுத்து அனுப்பும் குணம் படைத்தவர் தான் மயில்சாமி.

தன்னிடம் ஒன்றும் இல்லை என்றாலும் கூட, யாரிடம் கேட்டாவது கூட தேவைப்படும் நபர்களுக்கு உதவி செய்து விடுவார். அப்படி நல்ல மனம் படைத்த மயில்சாமி, தீவிர சிவபக்தன் ஆவார். திருவண்ணாமலை கோவிலில் அடிக்கடி செல்லும் மயில்சாமி, கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் சிவன் கோவிலில் சிவராத்திரி தினம் இரவு முழுவதும் இருந்து விட்டு, அதிகாலையில் வீட்டிற்கு திரும்பிய பின்னர் தான், நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Mayilsamy sons about rumour on his father drinking habits

மயில்சாமி மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, எம்.எஸ். பாஸ்கர், அமைச்சர் உதயநிதி என ஒட்டுமொத்த திரை உலகமும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தனர். மயில்சாமி மறைந்து சில தினங்கள் கடந்தாலும் தொடர்ந்து அவர் இல்லை என்ற விஷயம் பலரையும் வாட்டி தான் வருகிறது.

இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தனது தந்தையின் இறப்பு குறித்து பரவி வரும் வதந்திக்கு அவரது மகன்கள் முற்றுப்புள்ளி வைத்து உண்மையில் நடந்த சம்பவத்தையும் எடுத்து விளக்கி இருந்தனர்.

அதேபோல மயில்சாமி குடிப்பழக்கத்தை கைவிடவில்லை என்பது பற்றிய கருத்து பரவலாக இருந்தது பற்றிய பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப இதற்கு பதில் அளித்த அவரது மகன் யுவன், "எந்த இடத்துக்கு போனாலும் அப்பாவுக்கு Friend Zone அதிகம். ஒரு ஆடியோ லான்ச் போனா டைரக்டர், கேமரா மேன்னு எல்லாருமே அப்பாக்கு கிளோஸா இருப்பாங்க. இப்படி எல்லாரும் ஃபிரண்ட்ஸா இருக்கும் போது ஜாலியா பேசுவதற்கான ஒரு இடமாதான் அப்பா அதை யூஸ் பண்ணிக்கிறாரு. அப்பா நிறைய இடத்துல குடிக்கிறேன்னு சொல்லி இருக்காரே தவிர, அப்பா குடிச்சது மாதிரி யாருமே பார்த்துருக்க மாட்டாங்க. அவர் சொல்றத வச்சு நீங்க 24 மணி நேரம் குடிச்சிட்டு இருப்பாரு, அதனால தான் இப்படி ஆயிட்டாரு அப்படி எல்லாம் கிடையாது.

Mayilsamy sons about rumour on his father drinking habits

57 வயசுல அவரு தவறுனதுனால இந்த சின்ன வயசுல தவறணுமான்னு எல்லாரும் கேக்குறாங்க. அவர் அவ்வளவு விஷயத்தை உடம்புக்குள்ள எடுத்துக்கிட்டாரு. ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் தான் தூங்குவாரு. மிச்சம் இருக்குற நேரத்துல எல்லாம் என்ன யோசிப்பாருன்னா என்ன பண்ணலாம், அதே மாதிரி ஊருக்காகவும், மக்களுக்காகவும், ஃபேமிலி, பிரண்ட்ஸ்ன்னு எல்லாரையும் நெனச்சு தன்னுடைய உடம்பை ரொம்ப வருத்திக்கிட்டாரு. எத்தனையோ பேர் அப்பாவை இப்ப சாமி மாதிரி சொல்றப்போ, மூணு நாள் வெளியே இருந்து பார்க்கும்போது தான் தெரியவருது, இவ்வளவு விஷயம் பண்ணி இருக்காரு அப்படின்னு. அதுனால ஒருத்தவங்க யாராவது அப்படி குடிக்குறத சொல்லிட்டு போறாங்கன்னா அது பெருசா கண்டுக்கவே இல்லை" என கூறினார்.

Also Read | "கடைசியா அப்பா ஏதாவது சொன்னாரா?".. மயில்சாமி மகன்கள் சொன்ன விஷயம்!!..

அப்பா குடிச்சதுனால தான் இப்படி ஆகிடுச்சா?.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மயில்சாமி மகன் வீடியோ

Tags : Mayilsamy

தொடர்புடைய இணைப்புகள்

Mayilsamy sons about rumour on his father drinking habits

People looking for online information on Mayilsamy will find this news story useful.