Game Over Others Banner USA
Fakir Other Banner USA

மணிரத்னம் உடல்நலம் பற்றி பரவிய தகவல்..! விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்பட இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது வெறும் வதந்தியே! அவர் இன்று வழக்கம் போல் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். என்று தகவல் கிடைத்துள்ளது.

Mani Ratnam is admitted in hospital is false Rumours

தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் மணி ரத்னம். தமிழில் பகல் நிலவு என்ற படத்தின் மூலம் இயக்குனராக திகழ்ந்தார். இதயகோயில், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, சத்ரியன், தளபதி, ரோஜா, பம்பாய், ஆசை, இந்திரா,  ஆகிய மாஸ் படங்களை கொடுத்தவர். இவ்வளவு ஏன், காதலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை மற்றும் செக்க சிவந்த வானம் ஆகிய சூப்பர் படங்களை கொடுள்ளார்.

சூப்பர் ஹீரோக்களான கமல் மற்றும் ரஜினிகாந்திற்கு வாழ்வில் மறக்க முடியாத படங்களை கொடுத்த முக்கியமான இயக்குனர். தற்போது இவரது இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் உருவாக உள்ளது. இதில், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். இந்த நிலையில், நேற்று அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தொடர்ந்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி வந்தது. மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது வெறும் வதந்தியே! அவர் இன்று வழக்கம் போல் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

இதன் மூலம், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா? இல்லையா? என்பது தெரியாத போது, இது போன்ற செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று டுவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Maniratnam