’மனுஷன் வைரச விட கொடுமையானவன்’ கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்த மனதை கனக்க வைக்கும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை கீழ்பாக்கத்தில் தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநராக செயலாற்றி வந்த மருத்துவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார் என கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் அவர் உடல் தகனத்திற்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்து அங்கு வந்த சிலர் உடலை அடக்கம் செய்ய வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சிலர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் மருத்துவரின் உடல் வேறு பகுதிக்கு எடுத்து சென்று இறுதி மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது உடனிருந்த மருத்துவர் பாக்கியராஜ், தான் அடைந்த மனவேதனையை ஒரு வீடியோவாக்கி பகிர்ந்துள்ளார்.

அதில் நோய்வாய்ப் பட்டவர்களுக்கு உதவப்போய் தானும் நோய்க்கு பலியாகிப் போன டாக்டருக்கு இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது மனவேதனை தருவதாக தெரிவித்துள்ளார். இதை பகிர்ந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வைரசை விட கொடியவர்கள் சில மனிதர்கள் என்று தன் வேதனையை பதிவு செய்துள்ளார்.

Entertainment sub editor