பிரியங்கா ரெட்டி விவகாரம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கோபம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி லாரி ஓட்டுநர், கிளீனர் உட்பட 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Karthik Subbaraj Comments about Priyanka Reddy Case

அதன் ஒரு பகுதியாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நம் இடம் பெண்களை பயமுறுத்தும் இடமாகவும், பாதுகாப்பற்ற இடமாகவும் மாறிவிருகிறது. நிறைய காட்டுமிராண்டிகள் வெளியில் இருக்கிறார்கள். நமது சட்டம் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். அவர்களை சாகும் வரை தூக்குல போடணும். பெண்களுக்கு பாதுகாப்பான நாடாக நமது நாட்டை உருவாக்குவோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.