பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைய போகும் போட்டியாளர்?... அவரே வெளியிட்ட பதிவு.. செம வைரல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பை கூட்டுவதற்காக புதிய போட்டியாளர்களை உள்ளே அனுப்புவது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு முறையும் கடைசியில்தான் அப்படி நடத்தப்படும். ஆனால் இம்முறை புதுமையாக ஆரம்பத்திலேயே அர்ச்சனா, சுசித்ரா போன்றவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைய போகும் போட்டியாளர்Is this contestant to give re entry

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுசித்ராவும், பாலாவும்  நெருங்கிய நண்பர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த சுசித்ரா பாலாவுடன் நெருங்கிய நண்பராக பழகி வந்தார். ஆனால் இரண்டு வாரத்திலேயே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் பாலாவுக்கு சப்போர்ட் செய்து பல பதிவுகளை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் பாடகி சுசித்ரா தற்போது தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறும் பொழுது "பாலா ஷிவானியை காப்பாற்ற விதிமுறைகளை வளைக்கிறாரா?"என்பது போல மக்களிடம் கருத்து கணிப்பு கேட்டுள்ளார். மேலும் அவர் கூறும்போது "ஏனென்றால் நான் திரும்ப பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையலாம். அதனால் தான் உங்களிடம் இந்த கேள்வியை முன் வைக்கிறேன்" என்பதுபோல அவர் கூறியுள்ளார். சுசித்ரா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைய போகும் போட்டியாளர்?... அவரே வெளியிட்ட பதிவு.. செம வைரல்..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைய போகும் போட்டியாளர்Is this contestant to give re entry

People looking for online information on Biggboss4tamil, Suchitra will find this news story useful.