www.garudabazaar.com

கணவர் பெயரை சொன்னதுக்கே கத்திய அனிதா, ஆனா அன்னைக்கு... குறும்படம் போட்ட ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் பிக்பாஸ் ஒரு ராஜதந்திரத்தை முன்வைத்தார். போட்டியாளர்கள் யாரிடம் வேண்டுமானாலும் எந்த கேள்வி வேணாலும் கேட்கலாம் என்று கூறப்பட்டது. அப்போது ஆரியிடம் ஷிவானி "இந்த வீட்டில் யார் ஊக்கம் குறைந்து காணப்படுகிறார்கள்" என்று கேட்க ஆரி அனிதாவின் பெயரை சொல்லி, அவர் தன் குடும்பத்தை பற்றி கூறிய விஷயத்தை எடுத்த போதுஅனிதாவின் கணவர் பிரபாகரனின் பெயரை உபயோகித்து முடிக்கும் முன்னரே அனிதா கோபத்தின் உச்சிக்கே சென்றார்.

Fans share kurumpadam for anitha in biggboss4tamil

இதுவரை இல்லாத அளவிற்கு ஆரியிடம் மிகவும் கடுமையாக பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விரலை நீட்டியவாறு அவர் பல்லை கடித்துக்கொண்டு மிகவும் கோபமாக பேசினார். மேலும் அவர் "எனது கணவரை பற்றி பேசாதீர்கள் எனது கணவரை பற்றி பேசினால் நான் வருவேன்" என்பது போல அவர் கூறினார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஒரு வீடியோவை தற்போது வைரல் ஆக்கி வருகின்றனர். அதில் அவர் ரியோவை பற்றி பேசும் போது சம்மந்தமே இல்லாமல் "  எப்போ பார்த்தாலும் மனைவியிடம் அடி வாங்கி கொண்டிருக்கும் ரியோ" என்பது போல பேசியது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Fans share kurumpadam for anitha in biggboss4tamil

People looking for online information on Anitha, Kurumpadam will find this news story useful.