பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுவது இவரா?... யாருமே எதிர்பார்க்காமல் நடந்த சம்பவம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸில்  கடந்த வாரம் Freeze டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில்  வெற்றி பெறும் போட்டியாளர்கள் நேரடியாக இறுதி வாரத்துக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் ஆஜீத் வெளியேறினார். இந்நிலையில் ஆரி, பாலா, ரம்யா, சோம், கேபி மற்றும் ஷிவானி ஆகிய போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் வெளியேறப் போகிறார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர். ஏனென்றால்  இந்நிலையில் இந்த அடுத்த வாரம் பைனல்ஸ என்பதால் இறுதிப் போட்டியாளர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள மக்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுவது இவரா?is this contestant to be eliminated

இந்நிலையில் வைரலாகி வரும் தகவல் என்னவென்றால் ஷிவானி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவில் உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆரம்பம் முதலே அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாலும் ஷிவானிக்கு திருப்புமுனையாக அமைந்தது, அவரது தாயின் வருகைதான். அதற்குப் பிறகு அவர் பல விஷயங்களில் தனது கருத்தை சரியாக பதிவிடுவதும், டாஸ்க்குகளில் திறமையை வெளிப்படுத்துவதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுவது இவரா?... யாருமே எதிர்பார்க்காமல் நடந்த சம்பவம்..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுவது இவரா?is this contestant to be eliminated

People looking for online information on Biggboss4tamil will find this news story useful.