OFFICIAL : சியான் விக்ரம் மிரட்டும் 'கோப்ரா'... முக்கிய அறிவிப்பால் ரசிகர்கள் குஷி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்நிலையில் சினிமாத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய படங்களின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 7 கேரக்டர்களில் சியான் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கிறார். சயின்ஸ் பிக்ஷன் முறையில் உருவாகும் இந்தப் படம் மே மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது.

சியான் விக்ரம் மிரட்டும் கோப்ரா படம் முக்கிய அறிவிப்பு Important announcement from cobra vikram film distributors

தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான Seven Screen Studio நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சியான் விக்ரம் நடிக்கும் கோப்ர படத்தின் படப்பிடிப்பு 90 நாட்கள் முடிவடைந்த உள்ளதாகவும், மீதி  25 சதவீதம் படப்பிடிப்பு இன்னும் முடிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு முடிந்த பின்னர் இந்த வேலைகள் துவங்கும் என்று தெரிகிறது. இந்த செய்தியால் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகப்போகுது 'கோப்ரா' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சியான் விக்ரம் மிரட்டும் கோப்ரா படம் முக்கிய அறிவிப்பு Important announcement from cobra vikram film distributors

People looking for online information on Cobra, Seven Screen Studio, Vikram will find this news story useful.