Reliable Software
www.garudabazaar.com

Video: "நடிக்குறது ரொம்ப கஷ்டம்பா.. இப்பதான் தெரியுது!".. இயக்குநர் செல்வா செம்ம Interview!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் செல்வராகவன் Behindwoods சேனலுக்காக இயக்குநர் கே.பாக்யராஜூடன் பகிர்ந்த சுவாரஸ்ய பேட்டி வைரலாகி வருகிறது.

i feel acting is very tough Selvaraghavan exclusive

அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்ட செல்வராகவன், “நான் அவரது சகோதரர், காதல் கொண்டேன் படத்தை கொடுத்தவர் என்பதையும் ஆரம்பத்தில் அவருடன் படம் பண்ணியதையும் தாண்டி அவரது அசுரத்தனமான கடின உழைப்புதான், அந்த கிரெடிட் எல்லாமே அவருக்குரியது தான்.  நாம் கோடு தான் போட முடியும். அவர்கள் அதை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. எல்லாருக்குமே நாம் அப்படியான பணிகளைத்தான் செய்கிறோம். புதுப்பேட்டையின்போது தனுஷ் ஒரு திறமையாளராக உயர்வார் என தோன்றியது.

சாணி காயிதம் படத்தில் நடிகராக அறிமுகமாகும்போது, ஆரம்பத்தில் ஒரு இயக்குநராக உணர்ந்தேன். எஸ்.ஜே.சூர்யாவை இயக்கும்போது அவர் முழுக்க முழுக்க நடிகராகவே நடந்துகொண்டார். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பாரதிராஜா நடித்துள்ள ராக்கி எனும் படத்தை பண்ணியிருக்கிறார். ஒரு எதார்த்தமான கேரக்டர் வேண்டும் என்று என்னை அணுகினார். கீர்த்தி சுரேஷ்க்கும் எனக்குமான கேரக்டர்களை பற்றி இப்போது எந்த தகவலும் வெளியிடாமல் வைத்திருக்கிறோம். ஆனால் நடிப்பது என்பது சொல்லிக்கொடுக்கும்போது ஈஸியாக இருந்தது. நடிக்கும்போது கஷ்டமாக இருந்தது. நடிப்பது அவ்ளோ கஷ்டம் என எனக்கு தெரியாது. சாணி காயிதம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டும் முடிந்துள்ளது.

அத்துடன் ஆயிரத்தில் ஒருவன் படம் பண்ணினேன். ஆனால் ஒரு இயக்குநர் எல்லா வகையறா திரைப்படங்களையும் எடுக்கலாம் என நினைக்கிறேன். அதுதான் சவாலாகவும் நிறைவாகவும் இருக்கும், அதில் இருந்து கற்றுக்கொள்ளலாம் என நினைக்கிறேன். பார்வையாளர்கள் நம்மிடம் இருந்து வழக்கமாக எதிர்பார்ப்பதையே கொடுப்பதைவிடவும் புதிய முயற்ச்களை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். ஆயிரத்தில் ஒருவன் நினைத்த அளவுக்கு சென்று சேராதபோது வலி இருந்தது. இப்போது பேசப்படுகிறது. இதுவும் இயக்குநர் வாழ்வில் ஒரு அங்கம்தான்.

ஆயிரத்தில் ஒருவனை பொறுத்தவரை நம் ராஜாக்கள் இப்படியெல்லாம் இருந்திருக்க மாட்டார்கள். அதை சரியாக காட்ட வேண்டும் என நினைத்து எடுத்தேன். நாம் ஒரு நல்ல படத்தை கொடுக்கிறோம் என்கிற சிந்தனை மட்டுமே இருந்தது.” என பல்வேறு விஷயங்களை பாக்யராஜூடன் பகிர்ந்துகொண்டார்.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் அண்மையில் வெளியாகியது. இதேபோல் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷூடன் இணைந்து சாணி காயிதம் படத்தில் அறிமுக நடிகராகவும் செல்வராகவன் நடித்து வருகிறார். அவரது முழு நேர்காணலையும் இணைப்பில் உள்ள காணொளியில் காணலாம்.

VIDEO: "நடிக்குறது ரொம்ப கஷ்டம்பா.. இப்பதான் தெரியுது!".. இயக்குநர் செல்வா செம்ம INTERVIEW! வீடியோ

i feel acting is very tough Selvaraghavan exclusive

People looking for online information on Nenjam Marappathillai Tamil, Selvaraghavan, Sj suryah will find this news story useful.