''ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.. என்ன அவசரம் ?'' - பிரபல நடிகர் உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும் பிரபல மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பு காரணமாக நேற்று (26-03-2020) காலமானதாக கூறப்படுகிறது. அவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகரும் இயக்குநருமான ராஜ்மோகன், சேதுராமன் மறைவிற்கு உருக்கம் | Director Rajmohan Shares emotional note about Actor Sethuraman

அதன் ஒரு பகுதியாக நடிகர் , பேச்சாளர் என பண்முகம் கொண்ட ராஜ் மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாக்டரும் நடிகருமான சேதுராமன் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில்,  மரணத்திற்கு சில மணி நேரம் முன்பு வரை விழிப்புணர்வு வீடியோ செய்து கொண்டே இருந்த சமூக ஆர்வலர்.

இறுதி நாளிலும் இரண்டு முறை நடைபயிற்சி செய்த fitness follower. போன மாதம் தான் ஈசிஆரில் புதிய மருத்துவமனையை துவங்கினார். எனது நெருங்கிய நண்பரின் Webseriesல் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்திருந்த நல்ல நடிகர். இவருக்காகவே ரசித்து ரசித்து எழுதப்பட்ட நல்ல கதை. எதையும் சீக்கிரம் செய்து முடிக்கும் டாக்டர் சேதுராமன்.. என்ன அவசரம் உங்களுக்கு?

இத்தனை சீக்கிரமாய் எங்களை விட்டு சென்று விட்டீர்கள். எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. யாருக்காக வாழ்ந்தோம் எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம். உங்கள் பேரை காலம் சொல்லும்.. Rest in peace bro. My prayers for your family, friends & your little child ☹️ இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை. துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மரணத்திற்கு சில மணி நேரம் முன்பு வரை விழிப்புணர்வு வீடியோ செய்து கொண்டே இருந்த சமூக ஆர்வலர். இறுதி நாளிலும் இரண்டு முறை நடைபயிற்சி செய்த fitness follower. போன மாதம் தான் ஈசிஆரில் புதிய மருத்துவமனையை துவங்கினார். எனது நெருங்கிய நண்பரின் Webseriesல் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்திருந்த நல்ல நடிகர். இவருக்காகவே ரசித்து ரசித்து எழுதப்பட்ட நல்ல கதை. எதையும் சீக்கிரம் செய்து முடிக்கும் டாக்டர் சேதுராமன்.. என்ன அவசரம் உங்களுக்கு? இத்தனை சீக்கிரமாய் எங்களை விட்டு சென்று விட்டீர்கள். எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. யாருக்காக வாழ்ந்தோம் எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம். உங்கள் பேரை காலம் சொல்லும்.. Rest in peace bro. My prayers for your family, friends & your little child ☹️ இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை. துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை. இன்பம் பாதி துன்பமும் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம். நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம்.

A post shared by RAJMOHAN (@director_rajmohan) on

இன்பம் பாதி துன்பமும் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம். நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம்'' என்று குறிப்பிட்டுள்ளார். ராஜ்மோகன் சமீபத்தில் பிளாக் ஷீப் மற்றும் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் படத்தை இயக்கவருகிறார். இந்த படத்தின் துவக்க விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

 

Entertainment sub editor