www.garudabazaar.com

Video: எனக்கு 'சாப்பாடு' வேணாம்... பாதியில் 'எழுந்து' சென்ற சுரேஷ் யாரு காரணம்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் பொங்கல், சப்பாத்தி என சாப்பாட்டு அயிட்டங்களை வைத்து அடுத்த சண்டையை ஆரம்பித்தனர். ஆரி, அனிதா இருவரையும் ஜெயிலுக்கு அனுப்புவதில் போட்டியாளர்கள் அனைவரும் குறியாக இருக்க, அவர்கள் முகத்துக்கு நேரே உண்மையை ஆரி உடைத்து விட்டார்.

BB Tamil 4: Why suddenly Suresh Chakravarthy Walked out?

இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் சொன்னது அத்தனையும் உண்மை என ட்விட்டரில் கருத்துக்களை தெளிக்க, இந்தியளவில் தற்போது ஆரி ட்ரெண்டாகி வருகிறார். இவரின் பேச்சைக்கேட்டு பாலாஜியே சற்று பம்மினார் என்பது தான் ஆச்சரியம். ஜெயிலுக்குள் ஆரி போனாலும் அங்கு சுற்றி வளைத்து பஞ்சாயத்து பண்ணினர்.

மீண்டும் ஆரி-அர்ச்சனா இடையே உக்கிரமான சண்டை எழுந்தது. இதையடுத்து அவர் வீட்டிற்குள் செல்ல அவரை ரியோ கைத்தாங்கலாக கூட்டி சென்றார். அப்போது அர்ச்சனா ஏதோ சொல்ல, ரியோ கைவைத்து அவர் வாயை பொத்தினார். இதைப்பார்த்த சுரேஷ் பொசுக்கென சாப்பாடு வேண்டாம் என எழுந்து செல்ல அவரை நிஷா சமாதானம் செய்து கூட்டி வந்தார்.

பிறகு தான் தெரிந்தது அவர் அர்ச்சனாவுக்கு ஆதரவாக சாப்பாட்டை புறக்கணித்து எழுந்தார் என்று. இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்னதான் நடக்குது இங்க? என போட்டிபோட்டு கலாய்க்கின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

BB Tamil 4: Why suddenly Suresh Chakravarthy Walked out?

People looking for online information on Suresh Chakravarthy will find this news story useful.