www.garudabazaar.com

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 பவுன் நகைகள், வைரம் மாயம்.. போலீஸில் புகார்! முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் மாயமானதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Aishwarya Rajinikanth House Robbery Police Complaint Sources

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 'பத்து தல' சிம்புவின் விரல் மேனரிசம்.. "கலைஞர் அப்படி பண்ணுவாரு".. இயக்குனர் கிருஷ்ணா EXCLUSIVE!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் '3', கௌதம் கார்த்திக் நடிப்பில் 'வை ராஜா வை' உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது லால் சலாம் படத்தினை  இயக்கி வருகிறார்.

Aishwarya Rajinikanth House Robbery Police Complaint Sources

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Aishwarya Rajinikanth House Robbery Police Complaint Sources

Images are subject to © copyright to their respective owners.

சிலநாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வீட்டில் 60 பவுன் தங்க ஆபரணங்கள், வைர நகைகள், விலையுயர்ந்த கற்கள் காணாமல் போய் உள்ளது என சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

Aishwarya Rajinikanth House Robbery Police Complaint Sources

Images are subject to © copyright to their respective owners.

வீட்டில் பணியாற்றிய வேலை ஆட்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகாரில் கூறியுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  தற்போது போயஸ் கார்டன் ராகவீரா அவென்யூவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

Aishwarya Rajinikanth House Robbery Police Complaint Sources

Images are subject to © copyright to their respective owners.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த புகாரில், கடந்த 19.09.2019-ம் ஆண்டு முதல் 10.02.2023 வரை இடைப்பட்ட காலத்தில் 60 சவரன் தங்க, வைர நகைகள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் காணாமல் போயுள்ளது . எனது வீட்டில் வேலை பார்த்த பணியாளர்கள் ஈஸ்வரி, லட்சுமி மற்றும் வெங்கட் ஆகியோர் மீது சந்தேகம் உள்ளது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த புகாரில் கூறியுள்ளார்.

Also Read | ராம் சரண் நடிக்கும் RC15.. படப்பிடிப்பில் இயக்குனர் ஷங்கர் குதிரை சவாரி.. வைரல் போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth House Robbery Police Complaint Sources

People looking for online information on Aishwarya Rajinikanth will find this news story useful.