www.garudabazaar.com

“Confident போச்சு..!”.. பணத்தை எடுக்கும் முன் தாமரையிடம் சிபியின் கேள்வி! பாராட்டும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossTamil5: விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

after asking thamarai ciby to take money box biggboss

இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். பல போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தற்போது ஃபினாலே நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தாமரை, பிரியங்கா, நிரூப், ராஜூ, அமீர், பாவனி மற்றும் சிபி ஆகிய போட்டியாளர்கள் மட்டும் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர்.  இந்த போட்டியாளர்களில் அமீர் ஃபினாலே டிக்கெட்டை வென்று  எலிமினேஷன் ரவுண்ட் இல்லாமல் நேரடியாக இறுதிக்கட்ட போட்டிக்கு செல்ல உள்ளார்.

after asking thamarai ciby to take money box biggboss

பணப்பெட்டியில் அதிகரிக்கும் தொகை

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டினுள் ஒரு பணப்பெட்டியை சரத்குமார் அறிமுகப்படுத்தினார்.  இந்த பணப்பெட்டியில் முதல் முறையாக 3 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டது. இதை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு இப்போட்டியில் இருந்து வெளியேறலாம் என கூறப்பட்டது. ஆனால் அந்த பணத்தை எந்த போட்டியாளரும் எடுக்க முன்வரவில்லை. அந்த ரூ.3 லட்சமானது பின்னர் ரூ.5 லட்சம், ரூ.7 லட்சம், ரூ.11 லட்சம் என அதிகரிக்கப்பட்டு கொண்டே செல்கிறது.

after asking thamarai ciby to take money box biggboss

அமீரின் ப்ராங்க்

இதனைத் தொடர்ந்து வெளியான ஒரு ப்ரோமோவில் 11 லட்சம் ரூபாய் இருக்கும்போது அமீர் அதை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவதாக கூறினார். அதனைக் கேட்ட சிபி நல்ல முடிவு என அமீரின் தோளை தட்டிக் கொடுத்து ஊக்குவித்தார். ஆனால் சிறிது நேரத்திலேயே அமீர் தான் பிராங்க் செய்ததாக கூறிவிட்டார்.

after asking thamarai ciby to take money box biggboss

கான்ஃபிடன்டே போச்சுடா

அதன் பிறகு வெளியான மற்றொரு ப்ரோமோவில் அந்த 11 லட்சமானது 12 லட்ச ரூயாபாய உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிபி, ‘நான் இந்த பணத்தை எடுத்துக்கொண்டு இங்கிருந்து செல்ல போகிறேன். எனக்கு தற்போது, இந்தப் போட்டியில் நான் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை இல்லை’ என்று கூறுகிறார். ஹவுஸ்மேட்ஸ் நண்பர்களை பார்த்து கான்ஃபிடன்டே போச்சு.. எனவும் கூறுகிறார்.

after asking thamarai ciby to take money box biggboss

தாமரையிடம் உனக்கு வேண்டுமா என கேட்ட சிபி - நெகிழ்ச்சி காரியம்.

தாமரையோ, சிபியை இன்னும் ஒரு வாரம் தானே இருந்து விட்டு போகலாமே? என அவருக்கு அறிவுரை கூறுகிறார். ஆனாலும் சிபி, தான் இந்த பணத்தை எடுத்து செல்லவிருப்பதாக கூறியிருக்கிறார். அத்துடன்  உனக்கு வேண்டுமா? நீ எடுத்துக்கொள்கிறாயா என தாமரையை கேட்டுவிட்டு பின்புதான் சிபி இந்த முடிவை எடுப்பதாக தெரிகிறது.

after asking thamarai ciby to take money box biggboss

தாமரையின் வறுமை நிலை அறிந்து சிபி இவ்வாறு கேட்டதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சிபி அந்த பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய இணைப்புகள்

after asking thamarai ciby to take money box biggboss

People looking for online information on சிபி, தாமரை செல்வி, பிக்பாஸ், BiggBoss5, BiggBossTamil5, Ciby, Master ciby, Thamarai Selvi will find this news story useful.