கொரோனா : பாலைவனத்தில், சிக்கி தவிக்கும் நடிகர்... மனைவி கண்ணீர் பதிவு... "போன வருஷம் இதே நேரம்.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இப்பிழையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் மே மாதம் 3 -ம் தேதி வரைக்கும் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர்.

கொரோனா நடிகர் பிருத்திவி ராஜ் மனைவி உருக்கமான பதிவு Actor Prithviraj Sukumaran struck in jordan due to corona and wife supriya menon emotional tweet

இந்நிலையில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்திவி ராஜ். இவர் தனது அடுத்த படமான 'ஆடுஜீவிதம்' படப்பிடிப்பில் இருந்தார். இந்த ஷூட்டிங் ஜோர்டான் நாட்டின் பாலைவனத்தில் நடைபெற்று வந்தது. கொரோனா காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், 58 பேர் கொண்ட படக்குழு தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. இது பற்றி நடிகர் பிருத்திவி ராஜ் சமீபத்தில் ஒரு நீண்ட பதிவு இட்டிருந்தார். மேலும் உணவுக்கும் பஞ்சமாக இருப்பதாகவும் கவலை தெரிவித்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களை உலுக்கியது.

இந்நிலையில் அவரது மனைவி சுப்ரியா மேனன் தற்போது ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் "கடந்த வருஷம் இதே நாள் எல்லாரும் சேர்ந்து குடும்பமாக விருந்து சாப்பிட்டோம். இந்த வருஷம் கொரோனாவால எல்லாரும் பிரிஞ்சி இருக்கிறோம். சீக்கிரமே எல்லாம் சரியாக வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

Entertainment sub editor