சூர்யாவின் அடுத்தப்படம் பற்றிய சூப்பர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 38’ திரைப்படத்திற்கு இயக்குநர் விஜயகுமார் வசனம் எழுதவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Suriya 38- Uriyadi director Vijayakumar Pens dialougue for Suriya and Sudha Kongara film

‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 38’ திரைப்படத்திற்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘உறியடி 2’ இயக்குநரும், நடிகருமான விஜயகுமார் வசனம் எழுதுகிறார். இவர் நடித்துள்ள ‘உறியடி 2’ திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 38 திரைப்படத்தை தவிர செல்வராகவனின் ‘என்.ஜி.கே’, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். இதில் வரும் கோடை விடுமுறைக்கு ‘என்.ஜி.கே’ திரைப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.