"திடீரென வெடித்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு!".. 7 பேர் பலி.. 70 பேர் படுகாயம்! மசூதியில் நடந்த அதிபயங்கர சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Oct 27, 2020 12:35 PM

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரின் டிர் காலனியில் ஸ்பன் ஜமாத் மசூதியின் ஒரு பகுதியில் இருந்த மத பாடசாலையில் டிர் காலனியை சேர்ந்த சிறுவர்கள கல்வி கற்று வந்தனர்.

Peshawar Bomb Blast at seminary in Pakistan 7 Killed 70 Injured

இந்நிலையில், அந்த மதபாடசாலை இருந்த மசூதியின் மையப்பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் திடீரென நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரித்தும் வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Peshawar Bomb Blast at seminary in Pakistan 7 Killed 70 Injured | World News.