'கொரோனா தடுப்பூசி வந்துருச்சுனு’... ‘அப்பாவியாக இதெல்லாம் நம்பிட்டு இருக்கக் கூடாது’... ‘தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர்’...!!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Dec 03, 2020 07:16 PM

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாக அப்பாவியாக நம்பாதீர்கள் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

It\'s not game over in Covid-19 fight, warns UK PM Boris Johnson

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் இருந்து வருகிறது. இதுவரை அங்கு கொரோனாவால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 59,000-க்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், அங்கு கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வீசத்தொடங்கியுள்ளது.

இதனை அடுத்து நோய் பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்க அமெரிக்காவின் ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு வழங்க பிரிட்டன் அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 'கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாடுட்டுக்கு வரவுள்ளதால் மக்கள் அலட்சியமாக நடந்துகொள்ளக்கூடாது. கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை.

வரும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.  எப்படி இருந்தாலும், தடுப்பூசி இறுதியாக விநியோகிக்கத் தொடங்கும் போது மிகப்பெரிய தளவாட சவால்கள் இருக்கும். மருந்து குப்பிகள் மைனஸ் 70 டிகிரி செல்சியசில் சேமிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நபருக்கும் மூன்று வாரங்கள் இடைவெளியில் இரண்டு ஊசி தேவைப்படுகிறது, எனவே கிட்டத்தட்ட பாதிக்கப்படக்கூடியவர்கள் பாதுகாக்கப்படுவதற்கு தவிர்க்க முடியாமல் சில மாதங்கள் ஆகும்’ என தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. It's not game over in Covid-19 fight, warns UK PM Boris Johnson | World News.