'தமிழகத்தின் இன்றைய (30-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (30-11-2020) ஒரே நாளில் 1,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சுமார் 10,997 சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,15,360 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 146 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 1,456
பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,59,206 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக இன்று மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 6 பேர் அரசு மருத்துவமனையிலும் 3 தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,712 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
