அடக்கடவுளே! 4 மாசத்துக்கு அப்புறம் 'மீண்டும்' கொரோனா... அவசர,அவசரமாக 'ஊரடங்கை' அமல்படுத்திய நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Aug 11, 2020 07:12 PM

நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக உள்ளூர் மக்கள் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என நேற்று முன்தினம் அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து உலகம் முழுவதும் இருந்து நியூசிலாந்து நாட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

Coronavirus breaks out again in New Zealand after 102 days

இந்த நிலையில் , 102 நாட்களுக்கு பிறகு நியூசிலாந்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. அந்நாட்டின் ஆக்லாந்தில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

50 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனை சென்றார். அங்கு அவருக்கு பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டை சேர்ந்த மேலும் 6 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியானது.

4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆக்லாந்து முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் அறிவித்தார். 102 நாட்களுக்கு பின் கொரோனா பரவத்தொடங்கி இருப்பதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Coronavirus breaks out again in New Zealand after 102 days | World News.