‘இனி அனுமதி இல்லாமல் இப்படி எல்லாம் பண்ணவே முடியாது’.. பதவியேற்ற முதல் நாளே ‘அதிரடி’ காட்டிய டிவிட்டர் சிஇஓ..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Dec 01, 2021 01:20 PM

டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக பதவி ஏற்ற அகர்வால் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Twitter bans sharing photos, videos of other people without consent

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ஜாக் டோர்சி. இவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து இந்தியாவை சேர்ந்த பராக் அகர்வால் என்பவர் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டார். கடந்த 2007-ம் ஆண்டு டிவிட்டரில் மென்பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார். இதனை அடுத்து 2017-ம் ஆண்டு தலைமை தொழில்நுட்ப தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

Twitter bans sharing photos, videos of other people without consent

இந்த நிலையில் சிஇஓவாக பதவியேற்றதும் பராக் அகர்வால் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளார். அதில், தனிப்பட்ட நபரின் புகைப்படம், வீடியோ, முகவரி, மொபைல் எண், வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை சம்பந்தப்பட்ட நபர்களின் ஒப்புதல் இல்லாமல் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Twitter bans sharing photos, videos of other people without consent

தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பராக் அகர்வால் முன்பே ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பதவி ஏற்ற ஒரே நாளில் அதை நிறைவேற்றி அதிரடி காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #TWITTER #PARAGAGRAWAL

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Twitter bans sharing photos, videos of other people without consent | Technology News.