'அவரே அவரோட கழுத்தை இறுக்கி தற்கொலை பண்ணிட்டாருங்க...' 'நள்ளிரவில் கணவன் வீட்டிற்குள் நுழைந்தபோது, மனைவி...' கள்ளக்காதலினால் நடந்த பயங்கரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 18, 2020 08:34 PM

விழுப்புரம் மாவட்டத்தில் கணவரின் நண்பருடன் ஏற்பட்ட கள்ளகாதலால், கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி மற்றும் அவருடைய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Wife who murdered her husband by strangulation

ராஜகுமரன் (35) அவரது மனைவி லதா (30) மற்றும் மகள் சங்கவி (4) ஆகியோர் விழுப்புரம் அருகிலுள்ள வி.அரியலூர் கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த ராஜகுமரன், சொந்தமாக கார் வாங்கி விழுப்புரத்தில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டி வந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ராஜகுமரன் பேச்சுமூச்சு இல்லாமல் கிடப்பதாக அருகில் இருக்கும் உறவினர்களிடம் கூறியுள்ளார் மனைவி லதா.  செய்தி அறிந்த ராஜகுமரனின் தம்பி விரைந்து ராஜ்குமரனின் வீட்டுக்கு வந்துள்ளார்.  உடனடியாக உள்ளூரில் உள்ள மருத்துவர் ஒருவரை அழைத்து வந்து ராஜகுமரனை பரிசோதனை செய்தபோது, அவர் உயிரிழந்தது உறுதியானது.

ராஜகுமரன் முகம் மற்றும் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து ராஜகுமரன் மனைவியிடம் உறவினர்கள் கேட்டபோது முதலில் தனக்கு எதுவும் தெரியாது என சொன்ன லதா, பின்னர் ராஜகுமரனுக்கு காது வலி இருந்ததாக கூறி உள்ளார். அதனால் வலி தாங்காமல் அவரே தன் கழுத்தை இறுக்கிக்கொண்டு இறந்திருக்கலாம் என லதா உறவினர்களிடம் கூறியுள்ளார்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜகுமரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் ராஜகுமரனின் மனைவி லதாவை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரனை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் லதா.

இதற்கு முன் ராஜகுமரனும் லதாவும் பெரியார் நகரில் வசித்து வந்த போது ராஜகுமரனின் நண்பர் ரஞ்சித்துடன் லதாவிற்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும் இது தன் கணவருக்கு தெரியவந்து இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரின் பழக்கமும் தொடர்ந்ததால் மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜகுமரன் குடும்பத்துடன் சொந்த ஊரான வி.அரியலூர் கிராமத்திற்கே சென்று, உறவினர்களின் கண்காணிப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.

கடந்த 16-ம் தேதி இரவு வேலைக்கு சென்ற ராஜகுமரன் நள்ளிரவு 1 மணி அளவில் வீடு திரும்பி உள்ளார். அப்போது ரஞ்சித்தும் லதாவும் ஒரே அறையில் இருப்பதை கண்ட ராஜகுமரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். மது போதையில் இருந்த ராஜகுமரனுக்கும், லதா மற்றும் ரஞ்சித்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ரஞ்சித்  மற்றும் லதா இருவரும் சேர்ந்து ராஜகுமரனின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

கொலை செய்து விட்டு ராஜகுமாரன் வீட்டிலிருந்து தப்பித்து சென்றுள்ளார் ரஞ்சித். அதை அடுத்து தன் கணவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதாக உறவினர்களுன் நாடகம் ஆடியுள்ளார் லதா. அடுத்தக்கட்டமாக லதாவை கைது செய்த போலீசார், தற்போது தலைமறைவாக இருந்த ரஞ்சித்தையும் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் ராஜ்குமாரனின் உறவினர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Tags : #HUSBANDWIFE