பாய்ச்சல் எடுக்கும் கொரோனா... நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் எண்ணிக்கை... மக்களே, இனிமே தான் நாம உஷாரா இருக்கனும்! - முழு விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 15, 2021 08:39 PM

தமிழகத்தில் இன்று (15-03-2021) ஒரே நாளில் 836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

tn coronavirus covid19 updates statistics as on March 15

தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,60,562 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,149 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக சென்னையில் மட்டும் சுமார் 2,39,131 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 553 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,42,862 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக இன்று மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,551 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

தற்போது சென்னை உட்பட தமிழகமெங்கும் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் முன்னேசெரிக்கையாக மாஸ்க் அணிவது உள்ளிட்ட விசயங்களில் அலட்சியம் காட்டாமல் முறையாக பின்பற்ற வேண்டும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tn coronavirus covid19 updates statistics as on March 15 | Tamil Nadu News.